நிலம் கையகபடுத்துதல் சட்டம் என்பது மக்களுக்கெதிரான மோசடி சட்டமா?
Monday, 27 October 2014
நிலம் செல்வத்தின் தாய், உழைப்பு அதன் தந்தை” என்று வில்லியம் பெட்டி என்ற பொருளியல் அறிஞர் சொன்னதை காரல் மார்க்ஸ் தனது நூல் ஒன்றில் மேற்கோள் காட்டியிருப்பார். அதாவது இயற்கையின் கொடையான நிலமும், மனிதனின் உழைப்பும் சேரும்போதுதான் உற்பத்தி செய்யப்பட்ட செல்வம் பிறக்கிறது. ஆகவே செல்வத்தின் முக்கியமான கண்ணாக நிலம் திகழ்வதை அறியலாம்.